திங்கள், 1 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :532

திருக்குறள் – சிறப்புரை :532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. --- ௩௨
நாளும் வறுமையால் வாடும் ஒருவனை அவன் அறிவே அவனை கொல்வதைப் போல. ஒருவன் புகழினை அவனுடைய மறதியே( கடமையைச் செய்யத் தவறுதல்) அவனைக் கொன்றுவிடும்.
” கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத்
தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே “ --- புறநானூறு.

நல்வினை ஆற்றி, இமயமலையின் ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்திப் பழியற்ற உடலோடு இறத்தல் நன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக