புதன், 24 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :548

திருக்குறள் – சிறப்புரை :548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.   ~~~~
ஆட்சிக்கு அரசனாக ; காட்சிக்கு எளியனாக  நாள்தோறும் மக்கள்கூறும் குறைகளைக் கேட்டறிந்து நீதி வழங்கா மன்னவன் தன்னிலையில் தாழ்ந்து தானே அழிந்து போவான்.
“ வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
 வாழச் செய்த நல்வினை அல்லது
 ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை.” ~~ புறநானூறு.

இந்நிலவுலகில் வாழ்வதற்கு என்று வரையறுக்கப்பட்ட காலம் முழுதும் குறைவற வாழ்தல் வேண்டும் ; வாழும்பொழுது நல்வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும்பொழுது அஃதொன்றே துணையாவதன்றிப் பிறிதொன்றும் துணையாவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக