சனி, 27 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :551
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. ~~~ ௫௫௧
குடிமக்களின் அமைதி அழித்து அலைக்கழித்து வருத்தும் முறையற்ற செயல்களைச் செய்யும் கொடுங்கோல் மன்னன் கொலை செய்வதையே தொழிலாகக்கொண்ட ஒரு கொலைஞனைவிடக் கொடியவன்.
” கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுகதிர் அமையம் பார்த்திருந்தோர்… சிலப்பதிகாரம்.

கொடுங்கோல் வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் செத்து ஒழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைப் போல. வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக