திங்கள், 15 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :542

திருக்குறள் – சிறப்புரை :542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி . -------
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் கதிரவனையும் கார்மேகத்தினையும் சார்ந்தே உயிர்த்தெழுந்து வாழ்கின்றன அதைப்போல முறைசெய்து காப்பாற்றும் மன்னவனின் செங்கோல் நிழலில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். 
உலக உயிர்கள் :  இயற்கையின் ஆட்சியிலும் செயற்கையின் (மன்னனின்) ஆட்சியிலும். வாழ்வு பெறுகின்றன.
“ அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்
 அன்னோன் வாழி வென்வேற் குருசில்.” பொருநராற்றுப்படை.

அறத்தொடு பொருந்திய வழிகளை அறிந்துகொள்வதற்குக் காரணமான செங்கோல் உடைய, வெல்லும் வேல் படைக்குத் தலைவனாகிய கரிகால் பெருவளத்தான் இனிது வாழ்வானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக