செவ்வாய், 23 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :547

திருக்குறள் – சிறப்புரை :547
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.~~~~~
உலகத்தை யெல்லாம் காக்கும் அரசன் எந்நிலையிலும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்வானாயின் அந்நெறி முறையே (செங்கோலே)அவனைக் காப்பாற்றும்.
“அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்றுஅதன்
பின்னாகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்.” ~~ அகநானூறு.
அறனும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயல்.


1 கருத்து: