வியாழன், 11 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :538

திருக்குறள் – சிறப்புரை :538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். ----
சான்றோர் போற்றிப் புகழ்ந்த செயல்களையே செய்யவேண்டும் , அங்ஙனம்  செய்ய மறந்தார்க்கு எப்பிறவியிலும் நன்மை இல்லை.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
 நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர்.”  -- பதிற்றுப்பத்து.

மக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.

1 கருத்து: