திங்கள், 22 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :546

திருக்குறள் – சிறப்புரை :546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉம் கோடாது எனின். -----
 ஓர் அரசனுக்குப் போர்க்களத்தில் வெற்றி தருவது வேல் அன்று ; அவனுடைய வளையாத செங்கோலே. வளையாத செங்கோல் பெறும் சிறப்பு உணர்த்தப்பட்டது.
“ ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்
 திங்கள் அனையை எம்மனோர்க்கே”. –புறநானூறு.

வேந்தே.. ! நின் பகைவர்க்கு வெப்பம் நீங்காது தோன்றும் கதிரவனைப் போன்றவன் ; எம்போன்று நின் அருள் பெற்றோர்க்குக் குளிர் நிலவைப் போன்றவன் நீயே…!

3 கருத்துகள்: