வெள்ளி, 19 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :543

திருக்குறள் – சிறப்புரை :543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -----
அந்தணர் போற்றி உரைக்கும் நூலுக்கும் அவர்தம் அறவாழ்விற்கும்  அடிப்படையாய் அமைவது ஆளும் மன்னவனின் செங்கோலே.
“ கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈந்து.” – புறநானூறு.
நல்லபல நூல்களைக் கற்றதோடு, கேள்விச் செல்வமும்கொண்டு, வேள்வி செய்தலை உடைய அந்தணர்களுக்குப் பெறற்கரிய அணிகலன்களைத் தாரை நீர் வார்த்துக் கொடுத்த பெருந்தகையாளன்.
எம் மன்னன்.
அந்தணர்களுக்குப் பொருள் கொடுக்குங்கால் தாரைநீர் வார்த்துக்கொடுத்தல் உலகவழக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக