புதன், 3 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :534

திருக்குறள் – சிறப்புரை :534
அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. ----
இயல்பாகவே அஞ்சும் மனநிலை கொண்டவர்களுக்கு,  அவர்களைச்சுற்றி எவ்வளவுதான் பாதுகாப்பு இருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை. அதுபோலக்  கடமையை மறந்து களிப்பில் கிடப்பவர்களுக்கும் அறிவார்ந்த சுற்றம் இருப்பினும் அதனால் நன்மை ஏதும்  விளைவதில்லை.
“ கைஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
சொல் ஞானம் சோர விடல்.------ நாலடியார்.

அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே, நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக..

1 கருத்து: