செவ்வாய், 2 மே, 2017

திருக்குறள் – சிறப்புரை :533

திருக்குறள் – சிறப்புரை :533
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுவுலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ---- ௩௩
மகிழ்ச்சிக்கடலில் மூழ்கிக் கடமையை மறந்தவர்களுக்குப் புகழ்மை என்னும் பேறு கிடைப்பதில்லை, இஃது உலக அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
“ கருமம் சிதையாமே கல்வி கெடாமே
 தருமமும் தாழ்வு படாமே பெரிதும் தம்
இல்நலமும் குன்றாமே ஏரிளங் கொம்பு அன்னார்

நல்நலம் துய்த்தல் நலம். ---- நீதிநெறிவிளக்கம்.

1 கருத்து: