திங்கள், 3 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ---- ௮௨
அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் எங்கெங்கு நிகழ்கின்றனவோ அவை  அனைத்தையும் ஒற்றர்வழி அறிந்துகொள்வது அரசன் கடமையாகும்.
“ அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த..” – சிறுபாணாற்றுப்படை.

அறியாதார் கூறும் கூற்றை அறியாதான் போலக் கேட்டுக் கொள்ளலும் சொற்சுவை, பொருட்சுவை, கலை நுணுக்கம் ஆகியன அறியும் அறிவுடைமையும் புலவர், கலைஞர் ஆகியோர்தம் தகுதி அறிந்து சிறப்புச் செய்தலும் அரசனின் (நல்லியக்கோடன்) நற்பண்புகளாம்.

1 கருத்து: