வியாழன், 13 ஜூலை, 2017

ஊக்கம் உடைமை – 60
திருக்குறள் – சிறப்புரை :591
  உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. ----- ௯௧
உடைமை (செல்வம்) உடையவர் என்று போற்றப்படுபவர் ஊக்கம் உடையவரே ; ஊக்கம இல்லாதவர் வேறு செல்வ வளம் அனைத்தும் பெற்றிருந்தாலும் அவரை ஊக்கம் உடையவர் என்று சொல்லத் தகுதி உடையவரோ..?
“அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்..” --- அகநானூறு.
அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்ற சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.


2 கருத்துகள்: