ஞாயிறு, 11 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :564

திருக்குறள் – சிறப்புரை :564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். ----- ௬௪
 ‘எம் அரசன் கொடியவன்’ என்று மக்கள் தூற்றும் கொடுஞ்சொற்களை அரசன் பெறுவானாயின் அவன் வாழ்நாளும் நாளும் குறைய விரைந்து அழிவான்.
“ பாவமும் ஏனைப் பழியும் படவருவ
 சாயினும் சான்றவர் செய்கலார்….” --- நாலடியார்.

மானமுள்ளவர்கள் செத்துப் போவதாயிருந்தாலும் மானம் கெடவரும் பழி, பாவச் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக