வியாழன், 29 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :578
கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.-----௭௮
ஆற்றும் கடமையில் இழுக்கு நேராவண்ணம் கருணை புரிய வல்லார்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
“ தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ.”---- நற்றிணை.
கொடிய தீமை செய்வோரைக் கண்டவிடத்தும், அவர் உள்ளம் வருந்தி உணருமாறு, இனி அவ்வாறு செய்யாதிருக்க என்று பலமுறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக