வெள்ளி, 30 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. ---- ௭௯
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் செய்தாரையும் தண்டிக்காது அருள் நோக்கோடு அக்குற்றத்தைப் பொறுத்து  அவரைக் காப்பது தலைசிறந்த பண்பாகும்.
” கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும்…….” பதிற்றுப்பத்து.
கண்ணால் மகிழ்ந்து பார்த்து, உள்ளத்திலே வஞ்சக உணர்வுகொண்ட பகைவரிடத்தும் கனவினும் பொய் கூறுதலை அறியாதவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக