சனி, 24 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :573

திருக்குறள் – சிறப்புரை :573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். --- ௭௩
பாடலோடு பொருந்தி வராத பண்ணால் என்ன பயன் அதைப்போல அருள்நோக்கு இல்லாத கண்ணால் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்” – நாலடியார்.
 நிலையற்ற இந்த உடம்புக்கே உதவி செய்துகொண்டு வாழாமல் இறந்தபின் செல்லும் மேலுலகில் இருந்து இன்பம் நுகர்வதற்கான செயல்களையே செய்தல் வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக