செவ்வாய், 13 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :566

திருக்குறள் – சிறப்புரை :566
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். ---- ௬௬
   அரசன், சுடுசொற்களால் இழித்துரைப்பதையும் இரக்கமின்றி மக்களை வதைப்பதையும் இயல்பாகக்கொண்டு ஆட்சி புரிவானாயின் அவன் முன்னோர் வழிவந்த பெரும் செல்வம் மேலும் வளராது அழிந்து போகும்.  
“ ஒத்தகுடிப் பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை. “ – நாலடியார்.

அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக