புதன், 28 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். --- ௭௭
கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை ;கண்ணோட்டம் இல்லாதவர்கள்  கண் உடையவர்கள் அல்லர்.
‘ பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத் தக்கன்று அது காணுங்காலை.” --- நற்றிணை.

ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக