வியாழன், 15 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு, ----- ௬௮
சுற்றமாக அமைந்த சான்றோர்தம் அறிவுரைகளைக் கேட்டு அறநெறிவழி ஆட்சி நடத்தாத அரசன், அறிவிழந்து சினத்துடன் சீறி எழுவானாயின் அவனுடைய செல்வம் யாவும் தேய்ந்து சுருங்கும்.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர்…”  -பதிற்றுப்பத்து.
மக்களைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.


1 கருத்து: