புதன், 12 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.௯0
 ஒற்றனுக்குப் பலர் அறிய சிறப்புச் செய்தல் கூடாது  அங்ஙனம் செய்தால் அரசனே கமுக்கச் செய்திகளைப் பலரும் அறிய வெளிப்படுதியவனாவான்.
“சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.”—முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும்.


1 கருத்து: