ஞாயிறு, 16 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :594

திருக்குறள் – சிறப்புரை :594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை. – ௯௪
தளராத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தன் வழியைக் கேட்டுச் செல்லும்.
“ வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
 பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும்….. --- பழமொழி.

வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே சேர்த்துவந்தால் செல்வம் பெருகும்.

1 கருத்து: