வியாழன், 31 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-204.

 

தன்னேரிலாத தமிழ்-204.

வீங்கிழை நெகிழ விம்மி ஈங்கே

எறிகண் பேதுறல் ஆய்கோடு இட்டுச்

சுவர்வாய் பற்றும் நின்படர் சேண்நீங்க

வருவேம் என்ற பருவம் உதுக்காண்

தனியோர் இரங்கும் பனிகூர் மாலை…” ---குறுந்தொகை, 358.

செறிந்து விளங்கிய அணிகலன்கள் நெகிழ்ந்து உழலுமாறு அழுது,  நீர்த்துளிகளை வெளிப்படுத்தும் கண்களோடு ஈங்கு மயங்கற்க, ஆராய்தற்குக் காரணமாகக் கோடுகளைச் சுவரில் இட்டு, அதனைப் பற்றி நின்று கொண்டிருக்கும் உன்னுடைய துன்பம் நெடுந்தூரம் விலகிச் செல்லுமாறு, யாம் வருதும் என்று தலைவன் தெளிவித்த கார்ப்பருவ வருகையை இதோ காண்பாயாக …!-–தோழி, தலைவிக்குக் கூறியது.

1 கருத்து: