வியாழன், 6 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 14 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 14 - பேராசிரியர் சி. இலக்குவனார்

கல்விப் பொறுப்பு யாருடையது….?

 

மாநிலங்கள் இணைந்துள்ள கூட்டரசில் மாநிலங்களின் பொறுப்புகள் மிகுதியாகவும் கூட்டரசின் பொறுப்புகள் குறைவாகவும் இருத்தல் வேண்டும். பரதக்கண்டத்திலும் அவ்வாறே நாட்டுக்காவல், அயல்நாட்டுத் தொடர்பு, அஞ்சல் துறை முதலியன மட்டும் கூட்டரசு பொறுப்பிலும் ஏனையெல்லாம் மாநில அரசுகள் பொறுப்பிலும் இருத்தல் வேண்டும். பொறுப்புகளைக் கூட்டரசுக்குரியன, மாநில அரசுக்குரியன, இரண்டுக்கும் உரியன என மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். இப்பொழுது கல்வித்துறை மாநில அரசுக்குரியதாக ( 1964) உள்ளது. இதனை இரண்டிற்குமுரிய (கூட்டரசுக்கும் மாநில அரசுக்கும்) பொருளாக மாற்ற முயற்சி நடைபெறுகின்றது. இரண்டுக்கும் உரியது என்பது பெயரளவில் ஆகிச் செயலளவில் மையக் கூட்டரசுக்கே உரியதாகிவிடும் என்பதில் ஐயமில்லை”…….தொடரும்.

.  ---இலக்குவனார் இதழுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக