ஞாயிறு, 16 அக்டோபர், 2022

தாய்மொழி வழி மருத்துவக் கல்வி

 

தாய்மொழி வழி மருத்துவக் கல்வி

எந்தக் கல்வியையும் தமிழில்- தாய்மொழியில் கற்பிக்க முடியும். தனக்குத் தெரிந்ததைச்

 சொல்பவன் ஓர் ஆசிரியனாக இருக்க முடியாது. தனக்குத் தெரிந்ததைத் தன் 

தாய்மொழியில் சொல்ல வல்லவனே  நல்ல ஆசிரியனாக இருக்க முடியும், மாணவர்கள் 

மனம் கொள்ளத்தக்க வகையில் சொல்லும் வழியும் தாய்மொழியால்தான் இயலும். 

ஈண்டு இரண்டு உண்மைகளைக்  காண்போம்.


1847இல் மருத்துவர் சாமுவேல் ஃபிஷ்கிரீன் (1822-1884) எனும் அமெரிக்க 

மருத்துவர் இலங்கை வந்தார். ஆங்கில மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் 

இலங்கைவாழ் தமிழர்கள் 33 பேருக்குத் தமிழ்வழி ஆங்கில மருத்துவத்தைக் 

கற்பித்தார். மேலும் மாணவர்களுக்குத் தேவையான மருத்துவ நூல்களைத் தமிழில் 

மொழிபெயர்த்தார். இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே  தனி ஒரு மனிதன் 

அதுவும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் தமிழில் மருத்துவக் 

கல்வி அளிக்க முடிந்தது……… (மேலும் காண்க: உயிருக்குநேர், கட்டுரை எண்-2.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக