செவ்வாய், 18 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-2

 

தாய்மொழி வழிக் கல்வி-2

தாய்மொழி வழிக் கல்வி கற்பது மக்களின் உரிமை; அதற்கு 

ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமை. சமுக, பொருளாதார 

விடுதலையின்றி வெறும் அரசியல் விடுதலை மட்டுமே 

சுதந்திரமாகாது. அடிமை விலங்கொடித்து விடுதலை பெற்ற 

நாடுகள் பலவும் கல்விப் புரட்சியின் வழியே சமுக, 

பொருளாதார மாற்றங்களக் கண்டு முன்னேறியுள்ளன. 

விடுதலை அடைந்த பின்பு  புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க 

முனைந்த தலைவர்கள் தாய்மொழிக் கல்வி வாயிலாக 

அச்சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். சிந்தனைக்கும் 

செயல்பாட்டிற்கும் உதவாத வெறும் ஏட்டுக்கல்வியைப் 

புறந்தள்ளிவிட்டுத் தாய்மொழிக் கல்வியால் புதிய சமுதாயத்தை 

உருவாக்கினர்…..  .  தொடரும்…….(இரெ.குமரன்

உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக