ஞாயிறு, 9 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 17 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 17 - பேராசிரியர் சி. இலக்குவனார்

இந்தி மொழியே இந்தியாவின் மொழியெனக் கொண்டுவிட்டனர்.ஆங்காங்குள்ள மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்திலர். ஏனைய மாநில மொழிகளை அடிமை நிலைக்கு ஆளாக்கிக் கொண்டு வருகின்றனர். இதனை முற்றுப்பெறச் செய்வதற்கே கல்வித்துறையை மையக் கூட்டரசுக்கும் உரித்தாக்க விரும்புகின்றனர் போலும் என எண்ணுவதில் குற்றமின்று.

நாட்டு மக்கள் நலத்தினும் இந்தி மொழி வளர்ச்சியில்தான் மைய அரசு நாட்டங்கொண்டுள்ளது. மைய கூட்டரசுக்கும் கல்வித்துறை உரியதெனின் கல்வி பயிலும் மொழியாக இந்தியை எளிதில் ஆக்கிவிடலாமன்றோ?”  ---இலக்குவனார் இதழுரைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக