திங்கள், 17 அக்டோபர், 2022

தாய்மொழி வழிக் கல்வி-1

 

தாய்மொழி வழிக் கல்வி-1

“மொழி என்பது மனிதகுல மெய்யறிவின் பொக்கிசங்களைப் பாதுகாத்து மரபுவழியாக அளித்துச் செழுமைப்படுத்த வல்ல மதிப்புமிக்க சாதனமாகும்” –மாமேதை வி.இ. லெனின்.

மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன், சிந்திக்கும் திறன் தாய்மொழி வழியேதான் நிகழ்கிறது. எனவேதான் தாய்மொழி வழிக் கல்வி பெற வேண்டுவது இனியமையாததாகின்றது.

“ குழந்தையின் உடல் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாதது மனிதனின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழி. குழந்தை தனது முதல் பாடத்தைக் கற்பது தாயிடமிருந்துதானே! ஆகவே, குழந்தையின் மன வளர்ச்சிக்குத் தாய்மொழியன்றி வேறொரு மொழியை அவர்கள் மீது திணிப்பது தாய்நாட்டிற்குச்  செய்யும் மிகப்பெரிய பாவம் என்றே நான் நினைக்கிறேன்.” –மகாத்மா காந்தியடிகள்.  தொடரும்…….(இரெ.குமரன், உயிருக்குநேர் 2010, கட்டுரைச் சுருக்கம்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக