வியாழன், 13 அக்டோபர், 2022

தமிழ் முழக்கம் 21- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 21- பேராசிரியர் சி. இலக்குவனார்

 

“……நாட்டுக்கு நல்லன புதியன செய்வதில்  தணியா ஆர்வமும் விரைந்து திட்டங்களைத்  தீட்டிச் செயற்படுத்தும் திறனும் எல்லாராலும் போற்றப்படும் இனிய பண்பும் மிக்க நம் தமிழ் மாநில க் கல்வித்துறை இயக்குநர், அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பின்னர் உயர்நிலைக்கல்விக் கூடங்க

ளில் நடைபெறும் தேர்வுமுறைகளை மாற்ற முன்வந்திருப்பது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது. அனைவரும் ஒத்துழைத்து விரைவில் வெற்றிப் பெறச் செய்தல் வேண்டும்.இத்திட்டத்தை கல்லூரிகட்கும் உடனே கொண்டுவந்து செயல்படுத்துதல் வேண்டும் என விரும்புகின்றோம்.

 

மதுரை மாவட்டத்தின் முந்நூறு கல்விக்கூடங்களில்


 மட்டும்தான் முதலில் இத்திட்டம்  கொண்டுவரப்படும்  என்று 

அறிகின்றோம். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு 

முடியத்தான் இத்தேர்வுத்  திட்டத்தால் மாணவர்கள் பயன் 

பெறுவர் என்று தெரிய வருகின்றது.  நல்ல திட்டமாய  இதனை 

நாடெங்கும் எல்லாக் கல்வி நிலையங்களிலும் கல்லூரிகளிலும் 

உடனே செயல்முறைக்குக் கொண்டு வருதலே நன்று. நல்லதை 

இன்றே செய்தல் வேண்டும், செய்யத்தக்க செய்யாமையானும் 

கெடும் (1964 ஆம் ஆண்டு உரை)   இலக்குவனார் 

இதழுரைகள். (1964)  -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக