திங்கள், 10 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 351

திருக்குறள் – சிறப்புரை : 351
36. மெய்யுணர்வு
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. – 351
நிலையில்லாதனவற்றை நிலையின என்று பிறழ்ந்துணரும் மயக்க உணர்வினால் சிறப்பு இல்லாத பிறப்பு நிகழ்கிறது.
மீண்டும் பிறவாமையாகிய மெய்ப்பொருளை உணர்தல் வேண்டும்.
” நின்றன நின்றன நில்லா என உணர்ந்து

ஒன்றின ஒன்றின வல்லே செய்க “ ~ நாலடியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக