செவ்வாய், 11 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
 மாசறு காட்சி யவர்க்கு. – 352
மெய்ப்பொருள் இதுவென உணர்ந்த குற்றமற்றதெளிந்த அறிவுடையவர் அறியாமையாகிய இருள் நீங்கப் பெற்றுப் பேரின்ப நிலை எய்துவர்.
அறியாமையாகிய அகத்து இருள் நீங்கின் மெய்யறிவால் இன்பம் பிறக்கும்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
   பிறிதினால் மாண்டது எவனாம் “ ~ பழமொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக