புதன், 12 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 353

திருக்குறள் – சிறப்புரை : 353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. – 353
ஐயுற்று மயங்கி நின்று பின்னர் மெய்ப்பொருளைக் கண்டு தெளிந்தார்க்கு வாழும் வையகத்தைவிட வானுலகம் அண்மையில் உள்ளதாம். மெய்ப்பொருள் கண்டார்க்கு வானுலகம் எளிதே கிட்டும்.
“ துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது” ~ முதுமொழிக் காஞ்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக