திங்கள், 17 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :358

திருக்குறள் – சிறப்புரை :358
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
 செம்பொருள் காண்பது அறிவு. – 358
பிறப்பு என்று சொல்லப்படுகின்ற அறியாமை நீங்க,  சிறப்பு என்று சொல்லபடுகின்ற மெய்ப்பொருளைக் கண்டு தெளிவதே  அறிவாம்.
“ அறிவு அறியாமை கடந்து அறிவானால்

அறிவு அறியாமை அழகிய வாறே.” – திருமூலர்.

1 கருத்து: