வியாழன், 13 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :354

திருக்குறள் – சிறப்புரை :354
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. – 354
ஐய உணர்வில் மயங்கிக் கிடப்பினும்- முயன்று  மெய்யுணர்வினைப் பெற்றுத் தெளியாதவருக்கு இப்பிறப்பினால் ஒரு பயனும் இல்லையாம். பிறப்பறுத்தலாகிய பயன் இல்லை என்பதாம்.
“ துன்பமே மீதூரக் கண்டும் துறவு உள்ளார்
  இன்பமே காமுறுவர் ஏழையர் …..” நாலடியார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக