வியாழன், 20 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 361

திருக்குறள் – சிறப்புரை : 361
அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. – 361
ஆசை, எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும்  உயிரில் உறைந்து நின்று பிறவித் துன்பங்களையும்  தருகின்ற வித்து.
“ தம்மபதம், ‘ வனத்தில் பழங்களைத் தேடித் திரியும் குரங்கினைப்போல் ஆசைபிடித்தவன் பல பிறவிகளில் சுழல்கிறான்.” (334) என்று இயம்புகிறது.” – பேரா.சோ.ந. கந்தசாமி. 

1 கருத்து: