வியாழன், 6 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :507

திருக்குறள் – சிறப்புரை :507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். --- 0
அன்புடைமையை அடிப்படையாகக் கொண்டு, தாம் அறியவேண்டுவனவற்றை அறியாதவர்களைத் தேர்ந்தெடுத்தல் ஒருவனுக்கு எல்லா அறியாமையினையும் கொடுக்கும். அஃதாவது முதல் கோணல் முற்றும் கோணலாய் முடியும் என்பதாம்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
  புல்லா விடுதல் இனிது” --- இனியவை நாற்பது.
 தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக