திங்கள், 17 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :518

திருக்குறள் – சிறப்புரை :518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். ---
ஒரு செயலைத் திறம்படச் செய்தற்குரியவனைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவனைச் அச்செயலுக்குப் பொறுப்புடையவனாகச் செய்தல் வேண்டும்.
 அஃதாவது குறித்த வேலையைக் குறித்த காலத்தில் குறையின்றிச் செய்து முடித்தலாம்.
“ எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
 ஒளிபட வாழ்தல் இனிது. --- இனியவை நாற்பது.

ஏழை எளியவர்களை இகழ்ந்து பேசாது,  புகழ் உண்டாகும்படி வாழ்தல் இனிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக