புதன், 26 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :527

திருக்குறள் – சிறப்புரை :527
காக்கை கரவா கரைந்துன்னும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. ---
காகம், கிடைத்தவற்றை மறைத்துத் தான் மட்டும் உண்ணும் வழக்கம் உடையதன்று ;  தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் பண்புடையது.  சுற்றம் சூழ வாழும் அத்தகைய பண்புடையோர்க்கே ஆக்கமும்  உளதாகும்.
“ பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை “ --- நற்றிணை.
வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர், அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.


1 கருத்து: