சனி, 22 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :523

திருக்குறள் – சிறப்புரை :523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. -----
சுற்றத்தினரோடு மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடி உறவாட வாய்ப்பில்லாதவன் வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்று -- பயனற்றதாம்.
“ கெட்டார்க்கு நட்டாரோ இல்” – பழமொழி.

வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.

1 கருத்து: