திங்கள், 24 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :525

திருக்குறள் – சிறப்புரை :525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். ----
 கொடுத்து மகிழ்தலோடு இன்சொல் வழங்கும் ஆற்றலும் உடைய ஒருவனை  வழி வழியாகச் சுற்றத்தினர் சூழ்ந்து நிற்பர்.
“ ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
  குன்றுபோல் கூடும் பயன்:” --- சிறுபஞ்சமூலம்.
 இல்லார்க்கு மனம் இரங்கிக் கொடுக்கும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்றுபோல் மிகப் பெரிதாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக