ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :524

திருக்குறள் – சிறப்புரை :524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். ----
உற்றார், உறவினர், நண்பராகிய சுற்றத்தினர் சூழ்ந்து கொள்ளுமாறு அன்போடு இன்புற்று வாழ்வதே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதால் பெற்ற பயனாகும்.
“ உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
 எக்கலத்தானும் இனிது.: -- நாலடியார்.

 தன்னை உயிர்போல நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ், எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம். 

1 கருத்து: