செவ்வாய், 25 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :526

திருக்குறள் – சிறப்புரை :526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். ---
ஒருவன் பெரும் கொடையாளியாகவும் சினம் கொள்வதை விரும்பாதவனாகவும் இருப்பானாகில் அவனைவிடச் சிறந்த சுற்றம் உடையவர், இவ்வுலகில் வேறு எவரும் இலர்.
“ ஈரநல் மொழி இரவலர்க்கு ஈந்த
 அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக் காரி..—சிறுபாணாற்றுப்படை.

பரிசில் பெற வருவோரிடம் இனிமையாகப் பேசிக் கொடை வழங்கி, ஒளி பொருந்தியதும் பகைவர்க்கு அச்சத்தைத் தரக்கூடியதுமான வேலைத் தாங்கிய, கழல்தொடியணிந்த கையை உடையவன் காரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக