வியாழன், 13 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :514

திருக்குறள் – சிறப்புரை :514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். ----
எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து இவரே இப்பணிக்கு உரியவர் என்று ஒருவரை முடிவு செய்தாலும் பணியாற்றும் வழிமுறைகளில் வேறுபடும் மாந்தர்பலரும் உலகில் உண்டு.
“ எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
  செய் தொழிலால் காணப்படும்.” – நாலடியார்.

எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழிலைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக