திங்கள், 10 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :511

திருக்குறள் – சிறப்புரை :511
தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். --- ௧௧
ஒரு செயலால் விளையும் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து, அவற்றுள் நன்மை பயக்கும் வகையில் வினையாற்ற வல்லான் ஒருவனையே தேர்ந்து தெளிதல் வேண்டும்.
“ வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான்போல்
 நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்.” -------  கலித்தொகை.

சான்றோரை வழிபட்டு நின்று, மெய்ப்பொருளை அறிந்தவன் போலத் தோன்றுவான்; நல்லவர்களிடம் தோன்றும் மன அடக்கமும் உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக