சனி, 8 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :509

திருக்குறள் – சிறப்புரை :509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். --- 0
எந்த ஒரு வேலைக்கும் யாரையும் ஆராய்ந்து பார்க்காமல் தேர்ந்தெடுக்கக் கூடாது ; அவ்வாறு தேர்ந்தெடுத்தபின் அவர்தம் தகுதிக்குத் தக்கவாறு பணியையும் தேர்ந்து எடுத்துக் கொடுக்க வேண்டும்.
“ முயறலே வேண்டா முனிவரையானும்
 இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக.பழமொழி.
முயற்சியின்றியே, முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை அவர் கூடி இருக்கும் இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக