வெள்ளி, 9 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :562

திருக்குறள் – சிறப்புரை :562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ---- ௬௨
தேடிய செல்வம் நெடுங்காலம் தம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுபவர்கள் குற்றவாளியைத் தண்டிக்கும்போது,  முதலில் அவன் அஞ்சுமாறு அச்சுறுத்திப் பின் மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.
“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். – வாக்குண்டாம்.



1 கருத்து: