புதன், 7 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 786

திருக்குறள்- சிறப்புரை : 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. --- ௭௮௬
உள்ளுணர்வு  இல்லாது முகத்தளவில் ஒருவருக்கொருவர் புன்முறுவல் காட்டிச் செல்வது நட்பன்று; உள்ளத்தில் உண்மையான அன்போடு  மனம் குளிர நட்புப் பாராட்டுவதே நட்பு ஆகும்.
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே.” –புறநானூறு.
ஆதனுங்க..! என் நெஞ்சைத் திறப்போர், நின்னைக் காண்பர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக