ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :797

திருக்குறள் -சிறப்புரை :797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.--- ௭௯௭
ஒருவனுக்கு நன்மைதரும் செயலாவது, மூடருடன் கொண்ட நட்பினை ஒழித்து, அவரைக் கைவிடலே.
“இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்சமூலம்.
மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக