புதன், 14 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :793

திருக்குறள் -சிறப்புரை :793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு. --- ௭௯௩
ஒருவனை நட்பாக்கிக் கொள்வதற்குமுன், அவன் குணநலன்களையும், குடிப்பிறப்பினையும்  குற்றங்குறைகளையும்  அவனோடு எப்போதும் பழகுபவர்களையும் ஆராய்ந்து அறிந்தபின்னரே அவனை, நட்பாக்கிக்கொள்ளல் வேண்டும்.
“ கரப்புடை உள்ளம் கனற்ருபவரே
செருப்பிடைப் பட்ட பரல்.” –பழமொழி.

பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர், செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக