வியாழன், 1 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 781

79. நட்பு
திருக்குறள்- சிறப்புரை : 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. ---- ௭௮௧
தேர்ந்து நட்பைக் கொள்வதவிடச் செய்வதற்கு அரிய செயல்கள் யாவை உள ? அதைப்போலச் செய்யும் தொழிலுக்கு அரிய பாதுகாப்பும் ( நட்பைத் தவிர) வேறு எவை உள?.
“சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு”.—நாலடியார்.
வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் தேடிச்சென்று அவர்தம் நட்பைக்கொள்ளவேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக