செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :799

திருக்குறள் -சிறப்புரை :799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.--- ௭௯௯
ஒருவன், துன்புறும் காலத்தில் அவனைக் கைவிட்டு நீங்கியவர் நட்பினைத் தன்னுயிர் பிரியும் காலை நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்..
“ நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் ..” –புறநானூறு.

ஆதனுங்க…! நின்னை யான் மறவேன் ; நின்னை யான் மறக்கும் காலமாவது, என் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் காலத்தில்தான். என்னை யான் மறக்கும் காலம் உண்டாயின் அப்பொழுது என்னை மறப்பேனல்லது நின்னை மறவேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக